ராமநாதபுரம் கோவில் புதுப்பிக்கும் பணிக்கு நிதி உதவி
ராமேஸ்வரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கோவில் புதுப்பிக்கும் பணிக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நிதியுதவி வழங்கினார்
ராமேசுவரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தனது சொந்த நிதியிலி ருந்து கோவில் பணிக்காக ரூ.5 லட்சம் வழங்கினார். இந்த தொகையை கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் ராமேசுவரம் அ.தி.மு.க. நகர் செயலாளர் கே.கே. அர்ஜுனன், அவைத்தலைவர் குணசேகரன், கீழக்கரை நகர செயலாளர் ஜகுபர் உசேன்,ராம்கோதுணை தலைவர் சுரேஷ் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து தங்கச் சிமடம் புனித சந்தியாகப்பர் கோவில் தேர் பவனி விழாவில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டார். இதில் தங்கச்சிமடம் செயலாளர் வெலிங்டன், பாம்பன் செயலாளர் அலெக்ஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் ஆதில் அமீன், மண்டபம் இளைஞரணி செயலாளர் கள் கஜேந்திரன், தங்கச்சிமடம் நிர்வாகிகள் சேசு, ரன்னிங் டன். எமிரேட், பிரிட்டோ, சகாயம், கிளைச் செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.