ஊராட்சி பணியாளர்கள் சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு

மனு

Update: 2024-07-27 04:24 GMT
தமிழ்நாடு ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளில் சுமார் 426 சுகாதார ஊக்குநர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஜன.,4ம் தேதியில் இருந்து ஊராட்சியில் பணியாற்றும் சுகாதார ஊக்குநர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்க ஆணை வரப்பெற்றுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 1 முதல் ஆணையின் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் சுகாதார ஊக்குநர்களுக்கு செய்முறையில் குறிப்பிட்டுள்ள படி பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Similar News