அல்வா கிண்டி காங்., ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-07-28 01:06 GMT
மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, காங்., கட்சியினர் அல்வா கிண்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ், இளவரசன், இளையபெருமாள், ரகோத்தமன், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், கலைபிரிவு கலியமூர்த்தி, கஜாமொய்தீன், எஸ்.சி., பிரிவு பெரியசாமி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் தேவராஜ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய பா.ஜ., அரசு மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோஷங்கள் எழுப்பி, அல்வா கிண்டி கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், ராஜி, பெரியசாமி, தனபால், ராஜேந்திரன், சற்குருநாதன், செல்வராஜ், மகிளா காங்., பவுனாம்பால், சுரேஷ், கணேசன், சோசியல் மீடியா மாவட்டத் தலைவர் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News