மண்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடு

Update: 2024-07-28 13:16 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செங்ககட்டில் இருந்து செல்லும் மலையில் மண்மலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மலை உச்சியில் இருக்கும் இந்த கோவிலுக்கு கரடு, முரடான பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். இதற்கிடையே நேற்று ஆடி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News