கிணற்றில் விழுந்த மான் மீட்பு

மான் மீட்பு

Update: 2024-08-01 15:46 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் மேற்கு காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் விவசாய தோட்டத்தில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த பெண் மான் ஒன்று தண்ணீர் தேடி வரும் பொழுது இவருடைய விவசாய கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்துவிட்டது. உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் 50 அடி ஆழம் 10 அடி நீரில் இருந்த மானை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Similar News