கெங்கவல்லிசாலையில் தண்ணீர் ஓடியதனால் சாலை மறியல்

சாலை மறியல்

Update: 2024-08-02 15:59 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி பேரூராட்சி ஆத்தூர் செல்லும் சாலையில் இன்று சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்பொழுது வேகத்தடை தாண்டி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் சாலையிலே நிற்பதால், சாலை ஓரத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் (ம) பொதுமக்கள் தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சமாதானம் செய்த பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.

Similar News