பாமக சார்பில் தீரன் சின்னமலைக்கு மலர் தூவி மரியாதை

சங்ககிரி: சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு பாமக சார்பில் மலர் தூவி மரியாதை....

Update: 2024-08-03 17:23 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையில் நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி ஈரோடு பிரிவு சாலை பகுதியில் உள்ள தீரன் சின்னமலையின் நினைவு சின்னத்தில் அவரது உருவ படத்திற்கு பாமக சார்பில் மலர்மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை யின் 219 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாமக சார்பில் மாநில கௌரவத்தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கோ.க மணி தலைமையில் நிர்வாகிகள் தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அப்போது சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, சேலம் தெற்கு மாவட்டத்தலைவர் முத்துசாமி, மாவட்ட செயலர் செல்வகுமார், சங்ககிரி நகர செயலாளர் வி.டி.அய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், நிர்வாகி சாமிநாதன், சங்ககிரி ஒன்றிய தலைவர் வடிவேல், ஒன்றிய செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகர செயலாளர் சுரேஷ்குமார், எடப்பாடி நகர செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Similar News