தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை

Update: 2024-08-06 05:24 GMT
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் முதியனூர் அருகே கிராமத்திற்குள் பட்டப்பகலில் உலா வந்த ஒற்றை காட்டு யானை. வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய யானையால் அப்பகுதி சேர்ந்த கிராமவாசிகள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் ஊருக்குள் மற்றும் சாலைகளில் உலா வந்த ஒற்றை காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்ற பிறகு வாகன ஓட்டிகள், கிராமவாசிகள் நிம்மதியடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News