காதல் ஜோடி தஞ்சம்:

தஞ்சம்

Update: 2024-08-06 15:05 GMT
கெங்கவல்லி:.கெங்கவல்லி அருகே,74கிருஷ்ணாபுரம் பெரியார் நகரை சேர்ந்த நாகஜோதி மகன் உத்தமராஜா(23). சென்னை தனியார் நிறுவனத் தில் வேலை செய்து வருகிறார். கூடமலை நரிப்பாடியை சேர்ந்த ராஜகோபால் மகள் துர்கா தேவி (23). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸ் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறி, தாம்பரம் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பாது காப்பு கேட்டு கெங்கவல்லி போலீசில் தஞ்சமடைந்தனர். எஸ்ஐ செந்தில்குமரன் இருதரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். துர்கா தேவி பெற்றோர் ஏற்கவில்லை. இதையடுத்து உத்தம ராஜாவுடன் துர்கா தேவியை அனுப்பி வைத்தனர்.

Similar News