ஆடி பூரம் கல்வடங்கம் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....
சங்ககிரி :ஆடி பூரம் கல்வடங்கம் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் ஆடிபூரத்தையொட்டி அங்காளம்மனுக்கு பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம்,பன்னீர், இளநீர்,குங்குமம்,திருநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு அங்காளம்மனை வழிபட்டுச் சென்றனர்.