தலைவாசலில் தடுப்பணை கட்ட இடம் தேர்வு கூடுதல் கலெக்டர் ஆய்வு

ஆய்வு

Update: 2024-08-07 16:41 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் மணி விழுந்தான் ஊராட்சி வசந்தபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 11 லட்சத்தில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணை அமைக்கப்பட உள்ள இடத்தை சேலம் கூடுதல் கலெக்டர் லலித்ஆதித்ய நீலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து காட்டுக்கோட்டை ஊராட்சியில் நூலகம் கட்டும் பணி, பகடப்பாடி ஊராட்சியில் தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கட்டுமான பணி, இலுப்ப நத்தம் ஊராட்சியில் பயணிகள் நிழற்கூடம் மற்றும் ரேஷன் கடை கட்டும் பணியை பார்வையிட்டார்.

Similar News