வீட்டில் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

கைது

Update: 2024-08-08 02:40 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அதில், உலகங்காத்தான் காலனியைச் சேர்ந்த கண்ணன் மகன் லட்சுமணன்,38; என்பவர் வீட்டில் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Similar News