சங்ககிரி அருகே இரண்டு பாம்புகளால் பரபரப்பு....
சங்ககிரி: கத்தேரி பகுதியில் விவசாய தோட்டத்தில் இரண்டு பாம்புகளால் பெரும் பரபரப்பு...
சேலம் மாவட்டம்,சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கத்தேரி ஊராட்சி சாமியாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் விவசாயி செந்தில் இவரது விவசாயத் தோட்டத்தின் சாலையோரமாக இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதனைப் பார்த்ததோடு செல்போனில் படம் எடுத்துள்ளனர். மேலும் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி கொண்டிருக்கும்போது அப்பகுதி மக்கள் செல்போனில் படம் பிடித்து சத்தமிட்டதால் இரண்டு பாம்புகளும் தனித்தனியே பிரிந்து சென்றது. சங்ககிரி அருகே விவசாயத் தோட்டத்தில் இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து கொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.