தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தொழிற்சங்க கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு அதன் தலைவர் பொன்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.