கள்ளக்குறிச்சியில் நகல் எரிப்பு போராட்டம்

போராட்டம்

Update: 2024-08-10 06:56 GMT
கள்ளக்குறிச்சியில், மத்திய அரசு அமல்படுத்திய மூன்று குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூ., சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. கச்சேரி சாலையில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், வளர்மதி, விஜய், மாவட்ட தலைவர் அரசு, பொருளாளர் ராமன் பேசினர். நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களை ரத்த வேண்டும் என வலியுறுத்தி நகல் எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

Similar News