அரசு ஆண்கள் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்

வழங்கல்

Update: 2024-08-10 07:11 GMT
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நகர மன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கி, சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் முருகன் வரவேற்றார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் கலைச்செல்வன், செயலாளர் அபுபக்கர், துணைச் செயலாளர்கள் ரவீந்திர மோகன், பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் 381 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Similar News