முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது

பாப்பம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு எல்லை ஸ்ரீ முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது

Update: 2024-08-11 11:50 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கொக்கராயன்பேட்டை சாலையில் பாப்பம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ எல்லை முனியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. வருடம் தோறும் ஆடி மாதம் 25ஆம் நாள் இரவு திருவிழாவாக இந்த கோவிலில் விசேஷ வழிபாடு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு கோவில் திருவிழாவிற்கு சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று,ஆடு கோழி பலியிட்டு,பொங்கல் வைத்து ஸ்ரீ எல்லை முனியப்பனை வழிபட்டு சென்றனர். மேலும் இதனை ஒட்டி கோவிலை சுற்றிலும் ஏராளமான கடைகளும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் குடைராட்டினங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருந்தது. திருவிழாவை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் . ஆடி மாதம் 25ஆம் நாள் இரவு தொடங்கி அதிகாலை வரை மட்டும் இந்த கோவில் திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது..

Similar News