மது போதையில் மனு கொடுக்கச் சென்றவரை அடித்து இழுத்துச் சென்ற மனைவி

எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மது போதையில் ரகலையில் ஈடுபட்ட போது அவரது மனைவி கணவரை அடித்து அழைத்துச் செல்லும் காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது....

Update: 2024-08-11 15:39 GMT
எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மது போதையில் இருந்த செல்வன் என்பவர் ரகலையில் ஈடுபட்ட போது அவரது மனைவி செல்வத்தை அடித்து அழைத்துச் செல்லும் காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.... சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆலச்சம்பாளையம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு கூடுதலாக நான்கு வகுப்பறை கட்டிடங்களை சட்டமன்றத் தொகுதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 72.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் மற்றும் காங்கிரட் சாலை சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை  திறந்து வைப்பதற்காக வருகை புரிந்தார்.... அப்போது பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து அருகில் உள்ள குழந்தைகளை சந்தித்து இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு மது போதையில் இருந்த செல்வன் என்பவர் தான் கட்டிட வேலை செய்து வருவதாகவும் அதற்கு சான்றிதழ் வைத்துள்ளதாகவும் இதற்கு கடன் உதவி தர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்கு சென்றபோது அவரது மனைவி மற்றும் உறவினர்கள் செல்வத்தை கன்னத்தில் அடித்து அழைத்துச் செல்லும் காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அங்கு ஒரு கட்டிடத்தில் அடைத்து வைத்த போது அவரது கார் புறப்பட்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்து அவர் காரை நோக்கி வெகு தூரம் ஓடிச் சென்றார் மேலும் அங்கு இருந்த கட்சி நிர்வாகிகள் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.... மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் நிகழ்ச்சியில் கணவனை மனைவி தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Similar News