சங்ககிரி அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது!

சங்ககிரி: ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பள்ளி மாணவியரிடம் சில்மிஷம் போக்சோ சட்டத்தில் கைது..‌..

Update: 2024-08-12 00:06 GMT
சேலம் மாவட்டம்,சங்ககிரி அருகே பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியிடம் சிலிமிஷம்... ஜெராக்ஸ் கடை உரிமையாளரை சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு..... சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இந்த மாணவி வைகுந்தம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார்.அப்போது ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தையில் பேசி, சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி ஜெராஸ் கடையில் நடந்த சம்பவங்களை பெற்றோர்களிடம் கூறி கண்ணீர் மல்க அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியன் பெற்றோர்கள் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வைகுந்தம், மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் முத்துசாமி மகன் முரளிதரன் (43) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News