இரண்டு மணி நேரத்திற்க்கு மேலாக கொட்டி தீர்த்தக கனமழை

சேலம் மாவட்டம் எடப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 9 மணியிலிருந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கொட்டித் தீர்த்த கனமழை

Update: 2024-08-12 00:31 GMT
எடப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.... சேலம் மாவட்டம் எடப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான பேருந்து நிலையம், தாவாதெரு, கா.புதூர், வெள்ளாண்டிவலசு, மற்றும் கொங்கணாபுரம், மூலப்பாதை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 9 மணியளவில் இடியுடன் கூடிய கனமழை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.... கனமழை காரணமாக காபுதூர், எடப்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதோடு பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Similar News