தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்

நியமனம்

Update: 2024-08-14 01:16 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக சக்தி நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 19ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து போலீசார் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் வேலுார் சரகத்திற்கு மாற்றப்பட்டார். அதனையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சக்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமித்து டி.ஐ.ஜி., திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.

Similar News