சுதந்திர தின விழா காங்கிரஸ் சார்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கல்..‌

சங்ககிரி:சுதந்திர தின விழா காங்கிரஸ் சார்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கல்

Update: 2024-08-15 09:48 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியில் சங்ககிரி மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகேந்திரன் தலைமையில் நாட்டின் 78வது சுதந்திர தின விழாவையொட்டி கொடி ஏற்று விழா மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது, இதில் சங்ககிரி மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினர். இதனை யடுத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் இலவச நோட்டு புத்தகம்,பேனா பென்சில் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் பொன் சித்தையன் வரவேற்புரையாற்றினார், அப்போது சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம்,காவேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துசாமி, துணைத் தலைவர் கண்ணுபையன், ஊராட்சி செயலாளர் பார்வதி கவுண்டர், ஊராட்சி மன்ற பொருளாளர் பந்தள்ராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் காளியப்பன், தேவூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யாசாமி, உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு நாட்டின் 78வது சுதந்திர தின விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார்

Similar News