வரலட்சுமி விரதம் அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மனுக்கு வளையல் அலங்காரத்தில் சிறப்பு பூஜை ...

சங்ககிரி:வரலட்சுமி விரதம் அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மனுக்கு வளையல் அலங்காரத்தில் சிறப்பு பூஜை ..‌

Update: 2024-08-16 12:25 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் சனிக்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அருள்மிகு மாரியம்மனுக்கு பால், தயிர்,சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர், குங்குமம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செட்டிப்பட்டி பாலாம் மகளிர் குழு சார்பில் அருள்மிகு மாரியம்மனுக்கு வளையல்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு மாரியம்மனை வழிபாடு செய்தனர்.பின்னர் அனைவருக்கும் மகளிர் குழு சார்பில் அன்னதானம், கூழ் வழங்கப்பட்டது.

Similar News