அரசிராமணி சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்...

சங்ககிரி:அரசிராமணி சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்.

Update: 2024-08-17 14:14 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அரசிராமணி பகுதியில் மேற்குத் திசையை நோக்கி அமர்ந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் உடனமர் பெரிய நாயகி நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிர்,சந்தனம்,திருமஞ்சனம், பன்னீர்,இளநீர்,திருநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய, திரவிய பொருளைகொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு சோழீஸ்வரர் உடனமர் பெரியநாயகி நந்தி பகவான் சுவாமிகளை வழிபாடு செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News