பரமத்தி வேலூரில் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை.

பரமத்தி வேலூரில் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வேலூர் போலீசார் விசாரணை.

Update: 2024-08-17 16:09 GMT
பரமத்தி வேலூர்,ஆக.17:- பரமத்தி வேலூரில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் பொம்மகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவரது மனைவி பாண்டியம்மாள் இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். பாலமுருகன் பரமத்தி வேலூர் கைகோலார் தெருவில் தனியாக தங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முருகேசனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் வந்துள்ளார். சில நாட்களாக முருகேசன் உடல்நிலை சரியில்லாமல் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை காலை அவது மகன் ரமேஷ்  முருகேசனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். முருகேசன் செல்போனை எடுத்து பேசாததால் சந்தேகம் அடைந்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். சந்தேகம் அடைந்து அவரை வீட்டில் சென்று பார்த்த போது முருகேசன் வீட்டினுள் உள்ள விட்டத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்து மகன் ரமேஷிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த மகன் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் தனது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முருகேசனின் உடலை கைபற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் முருகேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News