மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

வழங்கல்

Update: 2024-08-19 03:37 GMT
காடகனுார் அரசு ஆதிதிராவிட நல பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த காடகனுார் அரசு ஆதிதிராவிட நல பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி ஓய்வுபெற்ற எல்.ஐ.சி., வளர்ச்சி அலுவலர் ஏழுமலை, நோட்டு, பேனா, பென்சில், சிலேட்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் முருகன், சங்கர், ராஜேந்திரன், நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News