மோட்டூர் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ..‌

சங்ககிரி:மோட்டூர் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு....

Update: 2024-08-19 04:28 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி மோட்டூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 15நாட்களுக்கு பூசாட்டுதலுடன் கம்பம் நடுவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து உலக நன்மை வேண்டியும் பெண்கள் தாலி வரம் வேண்டியும் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு மாரியம்மனை வழிபாடு செய்தனர்.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News