ராமநாதபுரம் காளி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

கீழக்கரை அருகே முனீஸ்வரம், மருதன்தோப்பு, மீனாட்சிபுரம், ஆகிய மூன்று ஊர்களைச் சேர்ந்த கிராம மக்கள் காலி குடத்துடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2024-08-19 05:46 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே முனீஸ்வரம், மருதன் தோப்பு, மீனாட்சிபுரம், போன்ற கிராமத்தில் இருந்து சுமார் 300 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் பல ஆண்டுகளாக தண்ணீர் கிடைக்காமல் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று இ. சி. ஆர். ரோட்டை கடந்து தண்ணீருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் இந்த மூன்று கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் குழாய் இணைப்பை வழங்கி தண்ணீர் வழங்கும்படி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இன்று காலிகுடங்களுடன் தண்ணீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் எங்களுக்கும் இவர்தான் கலெக்டர் எனவே கலெக்டர் அலுவலகத்திலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக காலி குடத்துடன் வந்தோம் என்றனர்.

Similar News