ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் பரிசளிப்பு விழா

விழா

Update: 2024-08-20 03:58 GMT
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா. நடந்தது.விழாவிற்கு குருகுலத்தின் தாளாளர் யத்தீஸ்வரி பிரேம பிரியா அம்பா தலைமை தாங்கி ஆசிரியரை வழங்கினார். குருகுலத்தின் முதல்வர் சசிகலா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கடலூர் சுரேந்திரா மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை இருதய நிபுணர் டாக்டர் அருண் பிரசாத், அவரது மனைவி டாக்டர் ரம்யா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் சீனியர் முதல்வர் நிஷ்காமிய பிராணாமாஜி அறிமுகவுரையாற்றினார். விழாவில் பேராசிரியர்கள் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.குருகுலத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

Similar News