நினைவு தினம் அனுசரிப்பு

அனுசரிப்பு

Update: 2024-08-20 04:11 GMT
கள்ளக்குறிச்சி ஓம் முருகா குரூப் நிறுவனர் தேவநாதனின் இரண்டாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி சாமியார் மடம் பகுதியில் உள்ள ஓம்முருகா டிராக்டர்ஸ் நிறுவனத்தில், மறைந்த தேவநாதனின் படத்தை, அவரது தந்தை ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் வீரமணி - தாய் புனிதா, மகள் சீதாலட்சுமி ஆகியோர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.ஓம் முருகா தேவா நினைவு அறக்கட்டளை நேற்று தொடங்கப்பட்டது. காலை 11:00 மணியளவில் சாமியார்மடம், மந்தைவெளி, கள்ளக்குறிச்சி பஸ்நிலையம், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News