கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகரில் உள்ள மின்மாற்றி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பழுதாகி போனது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தில் பல முறை புகார் மனு அளித்தும், இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இன்றியும், விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்