ஆலங்குடி: பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது!

குற்றச்செய்திகள்

Update: 2024-08-20 04:51 GMT
ஆலங்குடி அருகே ஆண்டிகுலப்பெண்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மனைவி கனிமொழி. இவருக்கும் சின்னப்பா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கனிமொழியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கனிமொழியிடம் சொத்து பிரச்னை சம்பந்தமாக அவரை தகாத வார்த்தையால் திட்டி சின்னப்பா தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் நேற்று சின்னப்பாவை கைது செய்தனர்.

Similar News