புதுக்கோட்டை நகரில் உள்ள பள்ளி கல்லூரிககளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருந்து ஏராளமான மாணவ மாணவியர்கள் கல்வி பயில வருகின்றனர். பள்ளி கல்லூரிகள் முடிந்து மாலை நேரங்களில் வீடு திரும்பும் மாணவர்கள் போதிய பேருந்துகள் இல்லாததால் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலையால் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.