திருக்கோவிலுார் வழியாக தாம்பரத்திற்கு புதிய ரயில் சேவை

சேவை

Update: 2024-09-23 02:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலையிலிருந்து, விழுப்புரம் வழியாக சென்னை, தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயிலை, பா.ஜ.,வினர் வரவேற்று இனிப்பு வழங்கினர். திருவண்ணாமலையிலிருந்து, திருக்கோவிலுார், மாம்பழப்பட்டு, விழுப்புரம் வழியாக சென்னை, தாம்பரத்திற்கு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களும், மறு மார்க்கத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.22-Sep-2024 திருவண்ணாமலையில் காலை 3:30 மணிக்கு புறப்பட்டு திருக்கோவிலுாருக்கு 4:10 மணிக்கும், தாம்பரத்திற்கு 8:30 மணிக்கும் சென்றடையும். அதேபோல் தாம்பரத்தில் மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு இரவு 9:57 மணிக்கு திருக்கோவிலுார் வந்தடையும்.ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News