பைக் மோதி விபத்தில் விவசாயி பலி

பலி

Update: 2024-08-21 04:26 GMT
தியாகதுருகம் அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற விவசாயி, பைக் மோதி இறந்தார்.தியாகதுருகம் அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 50; விவசாயி. இவர் கடந்த 19 ம் தேதி மதியம் 2:00 மணிக்கு சின்னமாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் சேலம் - சென்னை நான்கு வழிச்சாலையைக் கடக்க முயன்றார்.அப்போது பின்னால் வந்த பைக் பெரியசாமி மீது மோதியது. தலையில் பலத்த காயம் அடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு, நேற்று காலை இறந்தார்.புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News