ஆற்று மணலை மாட்டு வண்டியில் கடத்திய மூன்று பேர் கைது

மதுராந்தகம் அருகே ஆற்று மணலை மாட்டு வண்டியில் திருட்டுத்தனமாக கடத்தியவர்கள் மூன்று பேர் கைது மாட்டு வண்டிகள் பறிமுதல்

Update: 2024-08-21 14:00 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஏறு பாக்கம் ஓடையில் கள்ளத்தனமாக ஆற்று மணலை மாட்டு வண்டியில் திருடுவதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் மாட்டு வண்டியில் மணல் திருடிக் கொண்டு சென்ற மூன்று மாட்டு வண்டிகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மணல் திருடிய கருங்குழி மற்றும் கிணார் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்,ரமேஷ் மற்றும் பாஸ்கர் மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்..மேலும் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Similar News