சங்ககிரி அருகே மோட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்....

சங்ககிரி: மோட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்....

Update: 2024-08-22 16:32 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி மோட்டூர் மாரியம்மன் கோயில் திருவிழா 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் கம்பம் நடும்விழா தொடங்கியது இதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது இதனைதொடர்ந்து இன்று கோயில் வளாகத்தின் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்த பின்னர். மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் அருள்மிகு மாரியம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு அலகு குத்தியும் அக்கினி தீச்சட்டிகளை ஏந்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுதி அருள்மிகு மாரியம்மனை வழிபட்டு சென்றனர்.

Similar News