ஆலங்குடி அருகே உள்ள நெம்மகோட்டை சித்தி விநாயகர் கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலில் இன்று மஹா சங்கடகர சதுர்த்தி விழா முன்னிட்டு சித்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர் பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் ஆகிய நறுமண பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகரை தரிசித்தனர்