வடகாட்டில் நீர்நிலையை முறையாகத் தூர்வாரக் கோரி சாலை மறியல்!

போராட்டச் செய்திகள்

Update: 2024-08-23 05:29 GMT
ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் உள்ள அம்மன் குளத்தை தூர்வாரும் பணியை சீராக செயல்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். வடகாடு போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதே குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மற்றொரு தரப்பினரும் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Similar News