குழிபிறை ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட குரங்குகள் உலாவி வந்தன. அந்த குரங்குகள் குடிநீரை நாசம் செய்வதோடு, குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து திருமயத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.