நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்!

போராட்டச் செய்திகள்

Update: 2024-08-23 05:42 GMT
குறுவட்ட அளவர் பதவிகளைத் தரம் உயர்த்த நிதித்துறைச் செயலர் ஒப்புதல் அளிக்கக் கோரி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிப்பின் மாவட்டத் தலைவர் எஸ். தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ். செல்லதுரை, துணைத் தலைவர் எஸ். தேவி, இணைச் செயலர் ஆர். அருண், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஆர். ரெங்கசாமி உள்ளிட்டோரும் விளக்கிப் பேசினர். கோரிக்கையை ஏற்கெனவே மாநிலம் முழுவதும் தரம் இறக்கப்பட்ட அளவிலான குறுவட்ட நில அளவையர்களை, தரம் உயர்த்தும் கோப்பில் நிதித்துறைச் செயலர் ஒப்புதல் அளிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Similar News