திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

Update: 2024-08-23 15:10 GMT
வரும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் திமுக 50 சதவீத வாக்குகள் பெற வேண்டும் க.சுந்தர் எம்எல்ஏ நிர்வாகிகளிடம் வேண்டுகோள்! காஞ்சி தெற்கு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. இந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான முறையில் நிர்வாகிகள் அனைவரும் பணியாற்ற வேண்டும் எனவும், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் 50 சதவீத வாக்குகள் திமுக கூட்டணி பெற அயராது உழைக்க வேண்டும் எனவும், சிறப்பாக பணியாற்றும் கழக நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்படும் எனவும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் க. செல்வம் அவர்களே வெற்றி பெற செய்த திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்மாவட்ட கவுன்சிலர் டைகர் குணா, உள்ளிட்ட மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News