அச்சிறுப்பாக்கம் அருகே வெங்கடேசபுரம் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் திருக்கோயிலில் ஆராதனை விழா.

அச்சிறுப்பாக்கம் அருகே வெங்கடேசபுரம் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் திருக்கோயிலில் ஆராதனை விழா.

Update: 2024-08-23 15:13 GMT
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வெங்கடேசபுரம் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் திருக்கோயிலில் ஆராதனை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வெங்கடேசபுரம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 353 -ஆம் ஆண்டு ஆராதனை அதாவது மஹா குரு ஜீவசமாதி அடைந்து ஜீவஜோதி ஆக உலக மக்கள் நமக்கெல்லாம் தெய்வமாக காட்சி கொடுத்த நாள் குரோதி வருடம் ஆவணி மாதம் வெங்கடேசபுரம் கிராமத்தில் மஹா குரு சன்னிதானத்தில் தவக்கோலத்தில் அமர்ந்து காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளுக்கு நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு மஹா ஆராதனை நடைபெற்றது. முன்னதாக கோ பூஜையும், அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து மகானுக்கு மஹா தீப ஆராதனை நடைபெற்று நூற்றுக்கு மேற்பட்டோருக்கு சிறப்பு அன்னதானம் ஸ்ரீ ராகவேந்திரா குழு தலைமை குருசாமி செ.பன்னீர்தாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ராகவா தங்கராஜ், எம்.மணிகண்டன், பி.வீரமணி, கோ.கோகுலகண்ணன், ப.ஆனந்தக்கண்ணன், சீ.ஜோதிலிங்கம், குமரன் பொறையூர், ஆர்.லோகநாதன், விஜயன், பெருக்கரணை. கே.மோகன்தாஸ் ரெட்டியார், பி. ராஜேஷ்குமார், வெங்கடேசன், லோகநாதன், விவோ சங்கர், சீனிவாசன், பொன்மணி, ரா. வேல்முருகன், மற்றும் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசபுரம் ஊர் பொதுமக்கள் ராகவேந்திரா விழா குழுவினர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News