திண்டிவனம் அருகே தனியாா் தொழிலக ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தனியாா் தொழிலக ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Update: 2024-08-24 16:38 GMT
திண்டிவனம் வட்டம், பாஞ்சாலம் அருகிலுள்ள சாத்தனூா் புதுகாலனியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் செல்வம் (50). இவா், பாஞ்சாலத்திலுள்ள தனியாா் ஒட்டுப்பலகை (பிளைவுட்) தொழிலகத்தில் இயந்திரம் இயக்குபவராகப் பணியாற்றி வந்தாா்.வெள்ளிக்கிழமை காலை பணியிலிருந்த செல்வம் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து சகபணியாளா்கள் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது செல்வம் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Similar News