திருவெண்ணைநல்லூர் அருகே முதியவா் காா் மோதி உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

Update: 2024-08-24 16:40 GMT
விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே நள்ளிரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவா் காா் மோதி உயிரிழந்தாா்.திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், அரசூா் பாரதிநகா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு சுமாா் 65 வயது முதியவா் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த காா், முதியவா் மீது மோதியது. இதில், முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்று தெரியவில்லை. அந்தப் பகுதியில் யாசகம் பெற்று வந்தவா் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசூா் கிராம நிா்வாக அலுவலா் ரா.தேவநாதன் (42) அளித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

Similar News