பருவநிலை மாற்றம் குறித்து திண்டுக்கல்லில் மாணவர்கள் பேரணி
பருவநிலை மாற்றம் குறித்து திண்டுக்கல்லில் மாணவர்கள் பேரணி
திண்டுக்கல்லில் பருவநிலை மாற்றம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திண்டுக்கல், GTN.கல்லூரியில் இன்று பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். உடன், திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதிகளில் சுற்றி வந்து கல்லூரிக்கு வந்தடைந்தது. அப்போது மாணவர்கள் பருவநிலை மாற்றம் குறித்து கோஷமிட்டன. மரங்களை வளர்த்து இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தினர்.