சங்ககிரி நாட்டம்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

சங்ககிரி: நாட்டம்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா திரளானோர் கொண்டாட்டம்!

Update: 2024-08-26 12:17 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த நாட்டாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கண்ணபிரான் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.... கிருஷ்ணஜெயந்தியையொட்டி சங்ககிரி வட்டார யாதவா சங்கத்தின் சார்பில் நாட்டாம்பாளையம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கண்ணபிரான் மூலவர் சுவாமிக்கு, உற்சவ மூர்த்திக்கும் பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . இதனையடுத்து உற்சவ மூர்த்தியை பக்தர்கள் சப்பாரத்தில் வைத்து கோயில் வளாகத்தை சுற்றி வந்தனர். பின்னர் நடைபெற்ற உறி அடித்தல் நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை இந்த ஆண்டு திரளான குழந்தைகள் கண்ணன் மாறுவேடமிட்டு கோயிலுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு விழாவிக்குழுவினர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பாடு செய்தனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News