மயிலாடுதுறையில் அதிமுகவினரால் அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு போராட்டம்

மயிலாடுதுறையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்தும் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் செருப்பால் அடித்தும் அதிமுகவினர் போராட்டம்:-

Update: 2024-08-26 18:09 GMT
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து அண்ணாமலை பேசிய நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் தலைமையில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையின் உருவபொம்மையை சாலையில் போட்டு எரித்து, செருப்பால் அடித்து, ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News