அகில இந்திய எஸ்.சி.-எஸ்.டி. ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரெயில்வே கோட்டம் முன்பு நடந்தது

Update: 2024-08-29 03:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அகில இந்திய எஸ்.சி.-எஸ்.டி. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டத்தலைவர் பிச்சமுத்து, எஸ்.ஆர்.இ.எஸ். தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் வரவேற்று பேசினர். கூடுதல் கோட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் தென் மண்டல அமைப்பு செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படுகின்ற எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டை பாதிக்கும் கிரிமி லேயர் மூலம் சட்டம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் தென் மண்டல துணைச்செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட செயல் தலைவர் வடிவேல் நன்றி கூறினார்.

Similar News