இலவச மருத்துவ முகாமை துவங்கி வைத்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்

மாவட்ட வட்டார அளவிலான இலவச மருத்துவ முகாம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.

Update: 2024-08-31 05:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் மடத்துக்குளம் வட்டார அளவில் கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். உடன் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி ,மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பேரூர் கழக செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும் திரளான பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Similar News